இம்முறை கூட்டு எதிரணி காலிமுகத்திடலில் நடத்தும் மே தினக்கூட்டமானது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய செய்தியை கூறுவதாக அமையும். மிகப் பிரமாண்டமான மேதினக்கூட்டத்தை நாங்கள் நடத்துவோம் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
எமது மே தினக்கூட்டத்திற்கு நாட்டில் அனைத்து பாகங்களிலிருந்தும் மக்கள் கலந்துகொள்வார்கள். வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் பங்கேற்பார்கள்.
மேலும் மக்களினால் காலிமுகத்திடலை நிரப்புவது எமக்கொரு பிரச்சினையே அல்ல. ஆனால் மக்கள் நிரம்பி வழிந்து கடலில் வீழ்ந்து விடுவார்களோ என்றுதான் பயப்படுகின்றோம் என்றும் பஷில் ராஜபக் ஷ சுட்டிக்காட்டினார்.
கூட்டு எதிரணியினரால் காலிமுகத்திடலில் நடத்தப்படவுள்ள மேதினக் கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்:
கூட்டு எதிரணி இம்முறை காலிமுகத்திடலில் நடத்தும் மே தினக்கூட்டத்தில் நாட்டில் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் மக்கள் கலந்து கொள்வார்கள், வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் எமது கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
மலையகத் தோட்ட மக்கள் அதிகளவில் இம்முறை பங்கேற்பார்கள். அத்துடன் ரயில், பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள் என அனைத்து விதமான வாகனங்களிலும் பொதுமக்கள் எமது கூட்டத்திற்கு வருவார்கள்.
25 வருடங்களின் பின்னர் எதிர்க்கட்சி ஒன்றுக்கு காலிமுகத்திடல் கிடைத்துள்ளது. அதை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்துவோம். ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன. வரலாற்று ரீதியான மேதினக்கூட்டத்தை நாங்கள் வழங்குவோம்.
கேள்வி : காலி முகத்திடலை கூட்டு எதிரணியினரால் நிரப்ப முடியாது என சவால் விடுக்கப்பட்டுள்ளதே?
பதில் : காலிமுகத்திடலை நிரப்புவது எமக்கொரு பிரச்சினையே அல்ல. ஆனால் மக்கள் நிரம்பி வழிந்து கடலில் வீழ்ந்து விடுவார்களோ என்றுதான் பயப்படுகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM