அம்பாறை இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரையொன்றை அமைப்பதற்கு முன்னெடுக்கும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று வௌ்ளிக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது குறித்த விடயம் சம்பந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடல்களை அடுத்தே மேற்கண்டவாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சந்திப்புக்கு குறித்து மேலும் தெரியவருவதாவது,
அம்பாறை மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரையொன்றை அமைப்பதற்காக காணிகளை அளவிடும் செயற்பாடுகள் கடந்த புதன்கிழமையன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தழிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இவ்வாறான விகாரை அமைப்பதற்காக காணி அளவிடும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமையானது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இவ்விடயம் சம்பந்தமாக எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் இணைந்து செயற்படுவதென நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் இணக்கப்பாட்டினை எடுத்திருந்தனர்.
அதற்கமைவாக நேற்றைய தினம் மீதொட்ட முல்ல குப்பை மேடு அனர்த்தம் சம்பந்தமான விவாததினை நேரில் அவதானிப்பதற்கு பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவை இரா.சம்பந்தன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் கூட்டாக சந்தித்திருந்தனர்.
இதன்போது மாயக்கல்லி மலையில் விகாரை அமைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அதனையடுத்து எழுந்த சர்க்சைக்குரிய நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு இரு தலைவர்களாலும் கொண்டுவரப்பட்டது.
அதனையடுத்து இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலையை அண்டிய பகுதியில் சிறுபான்மையினரின் காணிகளே உள்ளன. அவர்களின் காணி உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
ஆத்துடன் கடந்த அரசாங்க காலத்தில் சிறுபான்மை இனங்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு மதத்தின் பெயரால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்த்தில் மீண்டும் அவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதற்கு இடமளிக்ககூடாது எனவும் இரு தலைவர்களாலும் கோரப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் குறித்த விடயம் சம்பந்தமாக உடனடியாக தான் கவனம் செலுத்துவதாகவும் நிலைமைகளை ஆராய்வதோடு அநீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் குறிப்பாக முறையற்ற வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாட்டை உடன் நிறுத்துவதற்கான நடடிவக்கைகளை முன்னெடுப்பதற்குரிய பணிப்புரைகளை வழங்குவேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக தெரியவருகின்றது.
இதேவேளை இச்சந்திப்பில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறித்த சந்திப்பு தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,
இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலையை அண்டிய பகுதியில் சிறுபான்மையினரின் காணிகளே உள்ளன. அவர்களின் காணி உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. இது தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் மாணிக்கமடு தொடர்பில் ஜனாதிபதியிடம் பல அழுத்தமான கோரிக்கைகளை விடுத்தனர். எனவேஇ இது தொடர்பில் ஜனாதிபதியால் சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.
இதனையடுத்து மாணிக்கமடு விவகாரம் தொடர்பில் கிழக்கின் ஆளுநர் மற்றும் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடமும் உடனடியாக ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது அவர்களுக்கு ஜனாதிபதி பல சாதகமான பணிப்புரைகளை விடுத்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
சிறுபான்மையினரின் பிரச்சினைகளின் போது தமிழ்இ முஸ்லிம் தலைமைகளான எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்படுவது வரவேற்கத்தக்க விடயம். இவ்வாறான தருணங்கள் சிறுபான்மையின அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
சிறுபான்மையினருக்கான நலன்களுக்கு குந்தகம் ஏற்படுகின்றபோது தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து குரல் கொடுப்பதன் ஊடாக பாரிய வெற்றிகளை எட்ட முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM