மீதொட்டமுல்லவில் ஏற்கனவே ஆபத்து இருக்கின்றது என்பதை அதிகாரிகள் அறிந்திருந்த போதும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக அப்பாவிப் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மீதொட்ட முல்ல அனர்த்தம் தொடர்பாக சபைஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த 14ஆம் திகதியன்று நாட்டு மக்கள் தமிழ் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் மீதொட்ட முல்ல பிரதேசத்தில் வசித்த அதிகமான மக்கள் பாரிய அனர்த்திற்கு முகங்கொடுக்க நேர்ந்தது.
பாரிய மலைகள் போன்று ஒன்று சேர்ந்திருந்த குப்பை மேடானது பல வீடுகளின் மீது சரிந்து விழுந்தது. பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகள் மூலம் 33சடங்கள் கண்டெடுக்கப்பட்ட போதிலும் கூட மேலும் பலர் குப்பை மேட்டில் சிக்கி புதைந்து போயுள்ளனர்.
இதற்கு முன்னர் ஆட்சி செய்த அரசாங்கங்களுடன் இந்த அரசாங்கமும் இப்பாரிய அனர்த்தத்திற்கு பொறுப்புக் கூறுதல் வேண்டும்.
குப்பைகளை அகற்றும் பணியானது இன்று அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களில் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் எல்லா நகரங்களிலும் இது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு பொருத்தமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது பாரிய சோகக் கதையாக மாறியுள்ள இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இலங்கையானது தோல்வி கண்டுள்ளது. விரக்தி மற்றும் சோகத்திற்கு ஆளாகியுள்ள மேற்படி அனர்த்தங்களின் குடும்பங்களின் துயர்களில் இணைந்து கொள்வதுடன் அதற்கு முகங்கொடுத்தோருக்கு போதிய நட்ட ஈட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவர்களை வேறு இடத்தில் தங்க வைப்பதற்கும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை நாட்டில் ஒரு முக்கிய சம்பவமாக கொண்டு நாட்டிலே அதிகரித்து வருகின்ற குப்பைப் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
அத்துடன் மேலும் சில விடயங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். குறிப்பாக இந்த அதிகாரிகளின் செயற்பாடு காரணமாக அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஆபத்து உள்ளது என்பது பற்றி அதிகாரிகள் ஏற்கனவே அறிந்துள்ளனர். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனக் கேட்கவிரும்புகின்றோம்.
இந்த விவகாரம் தற்போது போட்டி நிறைந்த அரசியலில் முக்கிய விடயமாகியுள்ளது. இலங்கையின் அரசியல் கலாசாரம் அவ்வாறானதாக மாறிப்போயுள்ளது. துரதிஸ்டவசமாக நாட்டுக்கு அல்லது நாட்டிலுள்ள மக்களுக்கு அவசியமான விடயமொன்று எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி முன்னெடுக்கப்படுவதில்லை.
பல்வேறு அரசியல் கட்சிகளால் கையாளப்படும் வேறுபட்ட தந்திரோபாயங்கள் அதிகாரங்களை மீளப்பெறுவதற்கும் சட்டரீதியாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தைக் குழப்புவதற்கும் முன்னெடுக்கப்படுகின்றன.
தமது சௌகரியத்துக்காக மற்றும் அதிகாரத்தை மீளப்பெறுவதற்குகாவும் இ நாட்டுக்கு நன்மையளிப்பதா அல்லது தீமையளிப்பதா என்பதனை பற்றியும் கவனத்தில் கொள்ளாது இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது அரசியல் கலாசாரமாக மாறியுள்ளது.
அவ்வாறானவர்கள் ஜனநாயக ரீதியில் மக்கள் வழங்கிய ஆணையை ஏற்றுக்கொள்ளாத வகையில் செயற்படுகின்றனர். இந்த அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும்.
சொந்த அரசியல் இலாபத்துக்காக மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்படக்கூடாது. மீதொட்டமுல்லை பனிக்கட்டி மலையின் ஒரு முனையாகும்.
எமது நாடு இதனைவிட பாரிய அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கலாம். அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்படாவிட்டால் இதுபோன்ற பல அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான அச்சம் காணப்படுகிறது. தேசப்பறறு எனக் கூறிக்கொள்வது நாட்டின் நன்மைக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைகளுக்கான மாற்றாக அமையாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM