ஊடக சுதந்திரம் குறித்து எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பால் 180 நாடுகளை உள்ளடக்கி நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த ஆண்டுக்கான வருடாந்த பட்டியலில் இலங்கை 141 ஆவது இடத்திலுள்ளது.
மேற்படி அமைப்பால் ஊடக சுதந்திர பட்டியலை உள்ளடக்கி வெளியிடப்பட்ட அறிக்கையில் ஊடக சுதந்திரம் ஒருபோதும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நாடுகளில் 62 சதவீதமான நாடுகளில் இந்த வருடத்தில் ஊடக சுதந்திரத்தில் வீழ்ச்சி நிலை காணப்படுவதாக அந்த அறிக்கை தெரிவி
க்கிறது.
ஊடகவியலாளர்களுக்கான சுதந்திரம் உயர் மட்டத்தில் பேணப்படும் நாடுகளில் முதலிடத்தில் நோர்வே உள்ளது. இதற்கு அடுத்து வரும் இடங்களில் சுவீடன், பின்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடு
கள் உள்ளன. ஊடகவியலாளர்களின் சுதந்திரத்துக்கு கடும் முட்டுக்கட்டைகளை விதித்துள்ள வட கொரியாவானது இந்தப் பட்டியலில் இறுதி இடமான 180 ஆவது இடத்திலுள்ளது. அந்நாட்டிற்கு அடுத்ததாக ஊடக சுதந்திரம் மிக மோசமான நிலையிலுள்ள நாடுகளாக எரித்திரியா, துர்க்மெனிஸ்தான், சிரியா, சீனா ஆகிய நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதேசமயம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் லாவோஸ், பாகிஸ்தான், சுவீடன், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் ஊடக சுதந்திரம் முன்னேற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கும் அந்த அறிக்கை சவூதி அரேபியா, எதியோப்பியா, மாலைதீவு மற்றும் உஸ்
பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஊடக சுதந்திரம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெரி
தும் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறுகிறது.
அதேசமயம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்கள் போலியான செய்திகளை வெ ளியிட்டு வருவதாக அவற்றை அடிக்கடி தாக்கிப் பேசுவதை வழமையாகக் கொண்டுள்ளமை குறித்து மேற்படி அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா 43 ஆவது இடத்திலுள்ளது. அந்நாடு கடந்த ஆண்டில் அது பெற்றிருந்த நிலையிலிருந்து இரு இடங்களால் இந்த ஆண்டில் வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியம் இந்தப் பட்டியலில் 40 ஆவது இடத்திலும் இந்தியா 136 இடத்திலும் உள்ளன.
அதேசமயம் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியங்கள் ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் மோசமான இடங்களாக உள்ளதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM