(Update)
வவுனியாவில் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில், சிகிச்சைபெற்றுவந்த பெண் பொலிஸ் சார்ஜன் சிகிச்சை பலனின்றி நேற்று (26) இரவு உயிரிழந்துள்ளார்.
வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் சார்ஜன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி மாலை புடையன் பாம்பு கடித்ததில் குறித்த பெண் பொலிஸ் சார்ஜன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார்.
...................................................................................................................................................
வவுனியாவில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கடமையில் இருந்த பெண் பொலிஸ் சாஜன் (42) மாலை 6.30 மணியளவில் புடையன் பாம்பு கடித்ததில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
தற்போதும் இவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM