தமது ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளதைக் கண்டிக்கும் வகையில் மொங்கோலிய ஊடகங்கள் நேற்றைய தமது பதிப்புகளில் அரசின் முயற்சிக்கு எதிரான வாசகங்களை வெளியிட்டன.
சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மொங்கோலியா கனிம வளத்தைக் கொண்ட நாடு. இங்கு நிலவி வரும் அமைதியான சூழலால் வெளிநாடுகள் பலவும் மொங்கோலியாவில் முதலீடு செய்வதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன.
இங்கு எதிர்வரும் ஜூன் மாதம் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, அரசு மற்றும் அரசின் நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை மொங்கோலியா விதித்துள்ளது. மேலும், அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கும் ஊடகவியலாளர்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகை வழங்கவும் அரசு முடிவுசெய்துள்ளது.
இதை எதிர்க்கும் வகையில் மொங்கோலியாவின் பத்திரிகைகள் தமது நேற்றைய பதிப்பின் முதல் பக்கத்தில், ‘உங்கள் தகவலறியும் உரிமைச் சட்டம் முடக்கப்பட்டுள்ளது’ என்ற வார்த்தைகளை மட்டுமே தாங்கி வெளிவந்துள்ளன.
இதே வார்த்தைகளை, அந்நாட்டின் செய்தி இணையதளங்களும் தமது முகப்புப் பக்கங்களில் நேற்றைய தினம் பதிவேற்றியிருந்தன.
இது குறித்து கருத்துத் தெரிவிக்கும் ஊடகவியலாளர்கள், அரசு தம்மீதான கறையைத் துடைத்துக்கொள்ளாமல் அதைச் சுட்டிக்காட்டும் தம் மீது கண்டிப்புக் காட்டுவதாகவும், சொற்ப சம்பளமே பெறும் தம்மால் செலுத்த முடியாத அபராதத்தை விதிப்பதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM