(புதுடில்லியிலிருந்து க.கமலநாதன்)
இலங்கையில் இடம்பெற்ற யுத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை நிவர்த்தித்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்குதல் மற்றும் திருமலை துறைமுக அபிவிருத்தி பணிகளில் கூட்டு செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது.
இயற்கை வாயு உற்பத்தி சூரிய சக்தி நிலையங்கள் உருவாக்கம், திருகோணமலை நகர அபிவிருத்தி, திருகோண மலை துறைமுக அபிவிருத்தியின் போது இலங்கை பெற்றோலி கூட்டுத்தாபனத்துடன் கூட்டு அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடுதல், திருமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் தாங்கிகள் கட்மைப்பினையும் அபிவிருத்தி செய்தல், வீதி அபிவிருத்தி, புகையிரத சேவை புதுப்பிப்பு, விவசாயம் மற்றும் நீர் முகாமைத்துவச் செயற்பாடுகள் உள்ளிட்ட காரணங்கள் குறித்து முக்கிய மேற்படி ஒப்பந்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோக பூர்வ வாசஸ்தலமான ஐத்ராபாத் இல்லத்தில் இடம்பெற்றம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற முத்தரப்புச் சந்திப்பின் போதே மேற்படி விடயங்கள் குறித்து அவதானம் செலுதப்பட்டன.
இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து, இந்து சமுத்திரத்தின் பொருளாதார மத்திய ஸ்தானமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கும் சமூக பொருளாதார கொள்கையின் மேம்பாட்டிற்காகவும் இந்தியாவின் முழுமையான உதவிகளை வழங்கி சக்திமிக்க இலங்கையை உருவாக்குவதற்கு வழிசெய்வதற்கு இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன் போது இருநாட்டு பிரதமர்களும் சமுத்திர பாதுகாப்பு, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து பிராந்திய அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆலோசித்து இணக்கப்பாட்டினை எட்டியிருந்தனர்.
அதேநேரம் இலங்கை இந்திய நட்புறவை பேணுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்னெடுப்புக்களையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அத்துடன் வருகின்ற மே மாதத்தில் தான் இலங்கைகான விஜயத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதில் பொறுப்புடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முகாமைத்துவ செயற்பாடுகள், தொழில்நுட்ப செயற்பாடுகள், தகவல் தொடர்பாடல் செயற்பாடுகள் விருத்தி, பல்கலைக்கழக புத்துருவாக்கச் செயற்பாடுகள் ஆகிய செயற்பாடுகளுக்கு இந்தியாவின் உதவியையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்தார். அதேநேரம் தற்சமயம் இந்திய உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பின் பின்னர் இந்தியா பொருளாதார ரீதியில் மேம்பாடுகளை அடையும் நாடாக மாறியுள்ளது. இது இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதார ஸதீர தன்மைக்கு பாதுகாப்பாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
யுத்தின் போது பாதிக்கப்பட்டவர்களிள் மனப்பாதிப்புக்களை நிவரத்தி செய்து நாட்டினுல் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகள்ளில் துரித அவதானம் செலுத்த வேண்டும் எனவும் இந்திய பிரதமர் சுட்டிக்காட்டினார். அத்துடன் நிலையான அபிவிருத்திக்கான இலங்கையின் முன்னெடுப்புக்களை மேலும் சீர்படுத்துமாரும் அறிவுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM