ரதுபஸ்வெல துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 3 இராணுவ அதிகாரிகளின் விளக்கமறியலியலை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் மே 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினை கம்பஹா நீதவான் வசந்த குணசேகர இன்று (26) பிறப்பித்துள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரிகள் கடந்த 3 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ரதுபஸ்வெல வெலிவேரிய சந்தியில் குடிநீர் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதனால் மூவர் உயிரிழந்தனர்.
இதில் இருவர் துப்பாக்கிசூட்டிலும் ஒருவர் தட்டையான ஆயுதத்தால் தாக்கப்பட்டும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM