ரதுபஸ்வெல ஆர்ப்பாட்டம் : கைதுசெய்யப்பட்ட 3 இராணுவ அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

Published By: Ponmalar

26 Apr, 2017 | 12:48 PM
image

ரதுபஸ்வெல துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 3  இராணுவ அதிகாரிகளின் விளக்கமறியலியலை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் மே 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை  கம்பஹா நீதவான் வசந்த குணசேகர இன்று (26) பிறப்பித்துள்ளார்.

குறித்த இராணுவ அதிகாரிகள் கடந்த 3 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ரதுபஸ்வெல வெலிவேரிய சந்தியில் குடிநீர் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதனால் மூவர் உயிரிழந்தனர்.

இதில் இருவர் துப்பாக்கிசூட்டிலும் ஒருவர் தட்டையான ஆயுதத்தால் தாக்கப்பட்டும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01