இந்தியாவின் கொச்சி கடற்படை பயிற்சி தளத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை வீரர் ஒருவர் பயிற்சியின் இடை நடுவே உயிரிழந்துள்ளார்.
குருணாகல் பகுதியைச் சேர்ந்த 39 வயதான வை.பி.என்.ஆர். வீரசிங்க எனும் கடற்படையின் ' டைவிங்' வீரரே இவ்வாறு நேற்று முன் தினம் மாலை வேளையில் உயிரிழந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
கொச்சி கடற்படை தளத்துக்கு உட்பட்ட கேரளா - எர்னா குளம் கடற்படை பயிற்சி மையத்தில் வழமையாக இடம்பெறும் பயிற்சி நடவடிக்கைகளில் குறித்த கடற்படை வீரரும் பங்கேற்றுள்ளார். கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் அங்கு பயிற்சியில் உள்ள மேற்படி கடற்படை வீரர்இ எர்ணாகுளம் பகுதியில் இடம்பெறும் வழமையான பயிற்சியின் இடை நடுவே நீரின் ஆழத்துக்கு சென்றுள்ளார்.
பயிற்சியின் பிரகாரம் நீருக்குள் இருந்து அவர் மீளவும் டைவிங் செய்து மேலே வர வேண்டும். எனினும் உரிய நேரம் கடந்தும் அவர் நீரின் மேற்பரப்புக்கு வராததால் பயிற்சி மேற்பார்வை அதிகாரிஇ உடனடியாக குறித்த கடற்படை வீரரை தேடும் பணியினை ஆரம்பித்துள்ளார்.
இதன் போதே நீருக்குள் இருந்து குறித்த வீரர் குற்றுயிருடன் மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் உடனடியாக கடற்படை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும் அங்கு சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காத நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 3.00 மணியாகும் போது குறித்த கடற்படை வீரர் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே இலங்கை கடற்படை வீரரின் மரணம் எவ்வாறு நிகழ்ந்ததுஇ அதற்கான காரணம் என்ன, பயிற்சிகளில் ஏதும் சிக்கல்கள் உள்ளனவா? என்பது குறித்து பூரணமாக வெளிப்படுத்த இந்திய கடற்படை விசேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணைகளுக்கு என சிறப்பு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM