மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்ததன் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் முழுமையாக பாதிக்கப்பட்ட 65 வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
முதலாவது கட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்த 30 குடும்பங்களுக்கு அண்மையில் வீடுகள் வழங்கப்பட்டன.
இந்த வீடுகளுக்காக அரசாங்கம் 3920 இலட்ச ரூபாவை செலவிட்டுள்ளது.
மேலும் இந்த வீட்டுரிமையாளர்களுக்கு வீட்டுத் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக வீட்டுரிமையாளர் ஒருவருக்கு தலா இரண்டரை இலட்ச ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.
இழந்த வீடுகளுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னர் பெறுமதிகூடிய வீடுகளுக்கு மேலதிகமாக நிதியை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM