பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உட்பட 7 பேருக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று உத்தரவிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, மாகாண சபை உறுப்பினர் ரொஜர் செனவிரட்ன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸமில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க, சந்திம ஜயலால் ஆகியோர் வழக்கில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் பெப்ரவரி 6ஆம் திகதி கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு எதிரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹ_சைனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திருந்தனர்.
இதனால், ஹெவ்லொக் வீதி மற்றும் பௌத்தாலோக்க மாவத்தை ஆகிய வீதிகளில் போக்குவரத்துக்கு தடையேற்படுத்தியதால், பொதுமக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 7வது சந்தேக நபரை கண்டுபிடிக்க முடியாதுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரையும் தேடி கண்டுபிடித்து வழக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM