வவுனியாவிலும் எதிர்வரும் 27 ஆம் திகதி பூரண கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அப்படியானதொரு முடிவை இந்த நிமிடம் வரை வவுனியா வர்த்தக சங்கம் எடுக்கவில்லை என அதன் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தொவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீலமீட்புக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள் இரண்டு மாதங்களை கடக்கின்றன. அந்த மக்களின் போராட்டங்களையும், அவர்களின் உணர்வுகளையும் வர்த்தக சமூகமாகிய நாமும் மதிக்கின்றோம். அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றபடபட வேண்டும் என்பதும் எமது அவா. இருப்பினும் வவுனியா மற்றும் கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைக்கு அமைவாக வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் எதிர்வரும் 27 ஆம் திகதி பூரண கடையடைப்பு நடைபெறும் என செய்திகள் வெளியாகியிருக்கின்றது.
ஆனால், வவுனியா வர்த்தச சங்கம் அப்படியான எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களோ அல்லது அவர்களுடன் தொடர்பு பட்டவர்களோ இதுவரை எம்முடன் போராட்டம் குறித்தோ அல்லது பூரண கடையடைப்பு குறித்தோ எந்த பேச்சுக்களும் செய்யவில்லை. அதேபோல் எமது வர்த்தச சங்கமும் இது தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை. ஆகவே, வவுனியாவில் பூரண கடையடைப்பு என தற்போது வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்பதே எமது கருத்து எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM