(எம்.எப்.எம்.பஸீர்)
பிரபல பாதாள உலக உறுப்பினர்களில் ஒருவரும் பிரேசிலில் இருந்து சீனி கொள்கலன்களில் வைத்து இலங்கைக்கு கொக்கைன் கடத்துவது தொடர்பிலான சட்ட விரோத நடவடிக்கை தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருப்பவர் என நம்பப்படுபவருமான சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்தவாரம் இவரை பொலிஸார் பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாகவும் 'குன்பு சுஜீ' என்ற பெயரில் அறியப்படும் தொன் சுஜித் குணசேகரவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளே இவரைக் கைது செய்துள்ளனர்.
மொரட்டுவ சமன் எனும் பிரபல பாதாள உலகத் தலைவனின் பிரதான சகாவாக கருதப்படும் இவர், சமனின் கொலையின் பின்னர் அந்த பாதாள உலகக் குழுவை வழி நடத்தி வருவதாகவும் தலைமறைவகையிருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்ப்ட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் மேலும் சுட்டிக்காட்டின.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM