கண்டி பூஜாபிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.
முச்சக்கர வண்டி வேகத்தை கட்டுப்படுத்த முடியாது பாதையில் சரிந்தபோது அதே பாதையில் வந்த டிப்பர் வண்டி முச்சக்கர வண்டியுடன் மோதியதில் 10 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி பொக்காவலை, ஹரங்கஹவ பிரதேசத்தில் இருந்து அங்கும்புறை பிரதேசத்திலுள்ள உறவினர் வீடு ஒன்றிற்கு செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் அங்கும்புரை உடகம பிரதேசத்தை சேர்ந்த 10 வயதுடைய லக்ஷான் சமரகோன் எனும் மாணவனே இறந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திய கடற்படை வீரர் ஒருவர் உட்பட மேலும் நான்கு பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக டிப்பர் வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூஜாபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM