ஜம்மு-காஷ்மீர் மானிலத்தில், பசுக் காவலர்களாகத் தம்மை அறிவித்துக்கொண்ட சிலர், முஸ்லிம் குடும்பத்தினரைத் தாக்கியதில், ஒன்பது வயதுச் சிறுமி கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (21) மாலை ரீஸி மாவட்டத்தில் இடம்பெற்றது.
தமக்குச் சொந்தமான ஆடுகள், மாடுகளுடன் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது பசுக் காவலர்களாகத் தம்மைக் கூறிக்கொண்டு அங்கு வந்த ஒரு கும்பல், முதியவர்கள், சிறுவர்கள் என்றும் பாராமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இரும்புக் கம்பிகளால் தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
வலி பொறுக்க முடியாத தாம், ஆளுக்கொரு பக்கமாகச் சிதறியோடியபோதும் தம்மைத் துரத்தி வந்து தாக்கியதாகவும் அவர்கள் கூறினர்.
தாக்குதல் ஓய்ந்ததும் அவர்களுக்குச் சொந்தமான ஆடுகள், மாடுகளை அந்த கும்பலே ஓட்டிச் சென்றது. தாக்குதலுக்குப் பயந்து தப்பியோடிய தமது பத்து வயது மகனைக் காணவில்லை என்றும் அந்தக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தம்மைக் கொலை செய்யும் நோக்கிலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் பற்றிய விபரங்கள் தெரிந்தும் பொலிஸார் அவர்களைக் கைது செய்யாமல் இருப்பதாகவும் குடும்பத்தினர் குற்றம் சுமத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM