ஆப்கான் இராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐம்பது இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மஸார் இ ஷரீப் என்ற இடத்தில், பள்ளிவாசல் ஒன்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இந்த இராணுவ முகாம், வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்கள் பயன்பாட்டுக்கானது. உள்ளூர் நேரப்படி நேற்று பகல் ஜும்மா தொழுகைக்காக இராணுவ வீரர்கள் பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தபோதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆறு தலிபான் தீவிரவாதிகள் ஆப்கான் இராணுவ வீரர்களின் சீருடையை அணிந்துகொண்டு இரண்டு இராணுவ வாகனங்களில் முகாமின் சோதனைச்சாவடிக்குச் சென்றுள்ளனர். அனுமதி கிடைத்து முகாமினுள் நுழைந்ததும், ரொக்கெட் எறிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளை இயக்கியும் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
தீவிரவாதிகளுள் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஏனைய ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட வீரர்கள் குறித்த எண்ணிக்கை முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லப்படுவதால், பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM