நாட்டில் நிலவும் திண்மக்கழிவு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பொருத்தமான நிகழ்ச்சித்திட்டங்களைத் தயாரிக்குமாறும் இந்த விடயத்தில் மத்திய அதிகாரசபைக்கு அதிகாரத்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக இன்று முற்பகல் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தப் பணிப்புரையை விடுத்தார்.
மீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்து விழுந்ததன் காரணமாக அனர்த்தத்திற்குள்ளான மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டம் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும்வரை ஒவ்வொரு வாரமும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
அந்தவகையில் இக்கலந்துரையாடல் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM