ஐ.பி.எல். 10 ஆவது தொடரின் 22 ஆவது போட்டி இந்தூரில் நேற்று இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் மெக்ஸ்வெல் தலைமையிலான பஞ்சாப் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதின.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி, பஞ்சாபை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப், ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. இந்த ஐ.பி.எல். தொடரில் இதுவரை சோபிக்காத தென்னாபிரிக்காவின் அம்லா, 60 பந்துகளில் 104 ஓட்டங்களைக் குவிக்க பஞ்சாப் அணி, முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்ட எண்ணிக்கையைப் பெற வித்திட்டார்.
பின்னர் களமிறங்கிய மெக்ஸ்வெல், 18 பந்துகளில் 40 ஓட்டங்களைக் குவித்தார். இதனால் பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.
199 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆட்டத்தை ஆரம்பித்தது மும்பை.
அந்த அணியின் முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களான பார்த்திவ் படேல், ஜோஸ் பட்லர் மற்றும் நிதிஷ் ராணா முறையே 37, 77, 62 ஓட்டங்களைக் குவித்தனர்.
இதனால், 199 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 16ஆவது ஓவரிலேயே எட்டிப் பிடித்தது மும்பை அணி.
இந்தப் போட்டியில் வெற்றியடைந்ததன் மூலம், புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது மும்பை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM