போர்த்துக்கல் ஃபெட்டிமா தேவாலயத்தில், கன்னி மரியாளை தரிசித்ததாகக் கூறப்படும் குழந்தைகள் இருவரை புனிதர்களாக அறிவிக்கவுள்ளதாக போப்பாண்டவர் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற போர்த்துக்கல்லின் ஃபெட்டிமா தேவாலயத்தின் நூற்றாண்டு விழா எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் போப்பாண்டவரும் கலந்துகொள்ளவுள்ளார்.
சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், குறித்த தேவாலயத்தில், ஜசிந்தா (7) மற்றும் அவரது சகோதரர் ஃபிரான்சிஸ்கோ மார்த்தோ (10) ஆகிய இருவரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி கன்னி மரியாளை தரிசித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னரும் சுமார் ஆறு மாத காலமாக அவர்கள் கன்னி மரியாளை தரிசித்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் சரியாக 13ஆம் திகதியே கன்னி மரியாள் இவர்கள் இருவருக்கும் காட்சி தந்திருக்கிறார்.
ஜசிந்தா மற்றும் மார்த்தோ இருவரும் பருவ வயதை எய்துவதற்கு முன்னரே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் ஃபெட்டிமா தேவாலய வளாகத்திலேயே புதைக்கப்பட்டது.
அவர்கள் இருவருமே புனிதர்களாக அறிவிக்கப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM