(ரொபட் அன்டனி)
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு இன்று வரவிருந்த பிரிட்டனின் ஆசிய பசுபிக் வெளிவிவகார பொதுநலவாய அலுவலக அமைச்சர் அலோக் சர்மா தனது விஜயத்தை திடீரென ரத்துச் செய்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் தெரேஸா மே எதிர்வரும் ஜூன் எட்டாம் திகதி பொதுத் தேர் தல் நடத்தப்படும் என வெளியிட்ட அறிவிப்பை அடுத்தே அலோக் சர்மா இலங்கைக்கான விஜயத்தை ரத்துச் செய்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது பிரிட்டனின் ஆசிய பசுபிக் வெளிவிவகார பொதுநலவாய அலுவலக அமைச்சர் அலோக் சர்மா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட தரப்பினரையும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது.
அத்துடன் யாழ்ப்பாணத்துக்கும் பிரிட்டன் அமைச்சர் அலோக் சர்மா விஜயம் செய்யவிருந்ததுடன் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது.
இது தொடர்பில் கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் பிரிட்டனின் ஆசிய பசுபிக் வெளி
விவகார பொதுநலவாய அலுவலக அமைச்சர் அலோக் சர்மாவின் இலங்கை விஜயம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் தெரேஸா மே எதிர்வரும் ஜூன் எட்டாம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளதையடுத்தே இந்த விஜயத்தை அமைச்சர் அலோக் சர்மா ரத்துச் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM