ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பிரன்டன் மெக்கல்லம் அணிந்திருந்த தொப்பியால் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் வீரரான கிறிஸ் கெய்ல் ஆட்டம் இழக்காமல் தப்பிய சம்பவம் நேற்றைய போட்டியின் போது இடம்பெற்றது.
இம்முறை நடைப்பெற்று கொண்டிருக்கும் 10 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் 8 அணிகள் இடையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்றிரவு இடம்பெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் அணியும், குஜராத் லயன்ஸ் அணியும் மோதிக்கொண்டன.
இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டவீரர் கிறிஸ் கெய்ல் 38 ஓட்டங்களுடன் களத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை சிக்சர் நோக்கி அடித்தார்.
அப்போது 'லாங்-ஆப்' திசையில் களத்தடுப்பில் நின்ற குஜராத் அணி வீரரான பிரன்டன் மெக்கலம் பாய்ந்து ஒற்றைக்கையால் பந்தை பிடியெடுத்தார்.
குறித்த பிடியெடுப்பில் நடுவருக்கு சந்தேகம் எழ, 3 ஆவது நடுவரின் உதவியை நாடினார்.
மீள்ஒளிபரப்பு முறையில் மெக்கல்லம் பந்தை பிடித்து உருண்ட போது, அவர் அணிந்திருந்த வட்டவடிவிலான தொப்பி லேசாக எல்லைக்கோட்டில் உரசுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குறித்த பிடியெடுப்பு சிக்சராக மாற்றப்பட்டதோடு, கெய்ல் தொடர்ந்து ஆடி அரைசதமும் கடந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM