கோத்தபாய கடற்படை முகாமை அகற்றக்கோரி போராட்டம்..!

Published By: Robert

19 Apr, 2017 | 01:51 PM
image

முல்லைத்தீவு வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதிகளை உள்ளடக்கி 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாமை அகற்றக்கோரியும் வட்டுவாகல் மற்றும் நந்திக்கடலில் மக்களின்  மீன்பிடி தொழிலுக்கு இடையூறாக தடைகளை ஏற்படுத்தியுள்ள கடற்படையினரை விலககோரியும் 3நாள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை வட்டுவாகல் மக்களும், மீனவர்களும் இணைந்து கோத்தபாய கடற்படை தளத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு  பகுதி மற்றும் வட்டுவாகல் பகுதியை உள்ளடக்கி  பொதுமக்களுக்குச் சொந்தமான 397 ஏக்கர்காணி மற்றும் அரச காணிகள் உட்பட 617 ஏக்கர் வரையான காணியை கடந்த 2009ம் ஆண்டு முதல் கடற்படையினர் ஆக்கிரமித்து பாரிய கடற்படைத்தளமொன்றை  அமைத்துள்ளதுடன் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியிலும்  கடற்தொழிலை மேற்கொள்வதற்கும் மீனவர்களுக்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். அத்தோடு குறித்த மக்களின் காணிகளில் அமைந்துள்ள கடற்படைத்தளத்தினுள் மக்களுக்கு சொந்தமான கால் நடைகளையும் பிடித்து வைத்துள்ளனர்.

குறித்த காணிகளை விடுவிக்குமாறும், வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் எந்தவித தடைகளையும் ஏற்படுத்தாது தம்மை தொழில் செய்ய அனுமதிக்குமாறு கோரியும் பல தடவைகள் போராட்டங்களை இந்த மக்கள் முன்னெடுத்த போதிலும்   காணிகளை கடற்படையினர் தமது தேவைக்கு சுவிகரிக்கும் விதத்தில் இரண்டு தடவைகள் அளவீடு செய்ய முற்பட்ட சமயம் பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். தற்போது கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள சுமார் 617 ஏக்கர் காணிகளும் மிகவும் வளம் நிறைந்த பகுதியாகவும் அதிக வருமானம் தரக்கூடிய கடற்தொழில் பகுதிகளையும் கொண்டுள்ளது. இதனை விடுவித்து தருமாறு அதன் உரிமையாளர்கள் கடந்த 7 ஆண்டுகளாக  கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமது சொந்த நிலங்களை விடுவிப்பது தொடர்பில் கடற்படையினரிடமிருந்து  எந்தவிதமான சாதகமான பதில்களும் கிடைக்காத நிலையிலும் மாறாக கடற்படையினர் குறித்த முகாமை சுற்றி நிரந்தர காவலரண்களை அமைந்து வருவதோடு பெரும் எடுப்பில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதோடு முகாமையும் விஸ்ரித்து வருகின்றனர். இதனால்  விரக்தி உற்ற மக்கள் இனியும் சொந்த நிலங்களை இழந்து வாழமுடியாது என தெரிவித்து குறித்த காணி கடல் மீட்பு போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவித்தனர்.

இன்றும் நாளையும் குறித்த கடற்படை தளத்துக்கு முன்பாக இரவுபகலாக தொடரும் இந்த போராட்டம் நாளை மறுதினம் வெள்ளிகிழமை வட்டுவாகலிலிருந்து பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்து அங்கு மாவட்ட செயலகம் முன்பாக ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுத்து பின்னர் 14 நாட்கள் தமது  காணிகளை விடுவிப்பது தொடர்பில் உரிய நல்ல பதிலுக்காக அரசுக்கு காலஅவகாசம் வழங்கி மாவட்ட செயலரிடம் மகஜர் ஒன்றினை கையளித்த பின்னர் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவது எனவும் 14 நாட்களுக்குள் நல்ல முடிவு அரசால் வழங்க படாவிட்டால் மீண்டும் கோத்தபாய கடற்படை முகாமுக்கு முன்பாக தொடர்கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்க இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்  தெரிவித்துள்ளனர்.

மக்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் இன்றையதினம் ஆரம்பிக்கபட்ட இந்த மக்களின் போராட்டத்தை தொடர்சியாக கடற்படையினர் ஒளிப்படம் எடுத்துவருவதோடு புலனாய்வாளர்களும் குறித்த பகுதியெங்கும் குவிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கமுடிந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30