லசந்த விக்ரமதுங்க விவகாரம் : முன்னாள் விமானப்படை தளபதி உள்ளிட்ட 3 உயர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை

Published By: Robert

19 Apr, 2017 | 09:40 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

Image result for லசந்த விக்ரமதுங்க விவகாரம்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரிகள் பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகள் மூவரிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர். நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ள மேற்படி மூவரிடமும் விஷேட வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

 முன்னாள் விமானப்படை தளபதியும் பாதுகாப்பு படையினரின் பிரதானியுமான எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் மனோ பெரேரா, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் குமார் ஹேரத் ஆகியோரிடமே இந்த வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.

நேற்று காலை 9.45 மணியளவில் குற்றப் புலனயவுப் பிரிவின் முன்னிலையில் ஆஜரான மேற்படி மூவரிடமும் குற்றப் புலனயவுப் பிரிவுக்கு பொருப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் தெசேராவின் நேரடி கட்டுப்பாட்டில் பொலிஸ் பரிசொதகர்களான நிசாந்த சில்வா, சுதத் குமார ஆகியோரின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டுவாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18