(எம்.எப்.எம்.பஸீர்)
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரிகள் பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகள் மூவரிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர். நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ள மேற்படி மூவரிடமும் விஷேட வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
முன்னாள் விமானப்படை தளபதியும் பாதுகாப்பு படையினரின் பிரதானியுமான எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் மனோ பெரேரா, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் குமார் ஹேரத் ஆகியோரிடமே இந்த வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.
நேற்று காலை 9.45 மணியளவில் குற்றப் புலனயவுப் பிரிவின் முன்னிலையில் ஆஜரான மேற்படி மூவரிடமும் குற்றப் புலனயவுப் பிரிவுக்கு பொருப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் தெசேராவின் நேரடி கட்டுப்பாட்டில் பொலிஸ் பரிசொதகர்களான நிசாந்த சில்வா, சுதத் குமார ஆகியோரின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டுவாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM