இரு அணிகளாகப் பிரிந்து நிற்கும் அ.தி.மு.க. கட்சி மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன.
அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் முதல்வராகத் துடிக்கும் டி.டி.கே.தினகரன், இரட்டை இலைச் சின்னத்தை தனது அணிக்குப் பெற்றுத் தருவதற்காக தேர்தல் திணைக்கள அதிகாரியொருவருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக சில தினங்களுக்கு முன் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவர் பேரில் டெல்லி பொலிஸார் வழக்கு ஒன்றையும் பதிவுசெய்தனர்.
இதையடுத்து, அவரைக் கைது செய்யுமாறு எதிர்க் கட்சிகள் சார்பில் அழுத்தங்களும் கொடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையிலேயே மீண்டும் இரண்டு அணியினரும் ஒன்றிணைவதற்கான பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.
இதன்படி, நேற்று (திங்களன்று) இரவு, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் கே.தங்கமணியின் வீட்டில் இரு அணியின் பிரதிநிதிகள் சிலர் ஒரு மணிநேரத்துக்கு மேலாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பத்து சிரேஷ்ட அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை விரைவில் சந்தித்து இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, சசிகலா அணியினர் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அதில் நாம் கலந்துகொள்ளத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளார். இதனால், விரைவில் இரு அணியினரும் சமரசம் செய்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அப்படி இணைந்தால், அ.தி.மு.க.வில், சிறையில் இருக்கும் சசிகலாவுக்கான அதிகாரம் குறையலாம் எனவும் நம்பப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM