கடலில் நீராடிய மாணவன் சடலமாக மீட்பு

Published By: Priyatharshan

17 Apr, 2017 | 12:48 PM
image

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி கர்பலாக் கடலில் நீராடச் சென்ற மாணவனொருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கிக் காணாமல்போன மாணவனின் சடலம் இன்று நண்பகல் காத்தான்குடி நதியா கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆரையம்பதி -3, பழைய கல்முனையைச் சேர்ந்த  வீரசிங்கம் தர்மதன் (வயது 17) என்ற மாணவன்,  தனது குடும்பத்தினருடன் கடலில் நீராடச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென்று குறித்த மாணவன் கடல் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இம்மாணவனைத்தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுவந்த நிலையில், குறித்த மாணவனின் சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில்  7 ஏ மற்றும் 2 பி  பெறுபேற்றை இம்மாணவன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02