இலங்கை படையினரிடம் ஐ.நா வின் எதிர்பார்ப்பு இதுவா.?

Published By: Robert

16 Apr, 2017 | 09:27 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஐ.நா அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பும் போது, அவர்கள் எந்த பாலியல் துஷ்பிரயோகத்திலும் தொடர்புபடவில்லை என்பதை உறுப்பு நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களில் தொடர்புபடவில்லை என்பதை ஒவ்வொருவரையும் ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், இலங்கையிடம் இதனையே ஐ.நா எதிர்பார்க்கிறது என்றும் குறிப்பிட்டார்.

ஹெய்டியில் சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஐ.நா அமைதிகாப்புப் பணியில் இலங்கை படையினரை தொடர்ந்து ஈடுபடுத்துவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்படுகின்றன. இலங்கை படையினர் நீண்டகாலத்துக்கு ஹெய்டில் நிறுத்தப்படவில்லை ஆனால் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவதானத்தில் கொள்ளப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் இந்த விடயத்தில் ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் பரந்துபட்ட பொறுப்புக்கூறலை உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்திய போதிலும், அதுபற்றிய தகவல்களை ஒருபோதும் உறுப்பு நாடுகள் ஐ.நாவுக்கு வழங்கியதில்லை என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய இலங்கை படையினர் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என  ஐ.நாவிற்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே வலியுறுத்தியுள்ளார். 

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய இலங்கை படையினர் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியிருந்த அசோசியேட்டட் பிரஸ், இந்தக் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தது.

இதுகுறித்து தெளிவுப்படுத்திய போதே ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

ஐ.நா அமைதி காப்புப் பணிக்கு  படையினரை வழங்கியுள்ள அனைத்து நாடுகளும், தமது படையினரின்  பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஏனைய மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.

அல்லது தமது படையினரைப் பொறுப்புக்கூற வைக்க மறுக்கும் நாடுகளின் பங்களிப்பை நிறுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கான நிதி இழப்பீடுகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறானதொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே மேலும் வலியுறுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02