பெண் வழக்கறிஞர் ஒருவர் மீது அயல் வீட்டுப்பெண்கள் மிக மூர்க்கத்தனமாக தாக்கி, ஆபாச வார்த்தைகளால் திட்டும் காணொளியொன்று இணையத்தளத்தில் வைரலாக பரவிவருகின்றது.
இச் சம்பவம் இந்தியாவில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
அரச காணியொன்றை ஆக்கிரமிப்புச் செய்த பெண் மீது தொடரப்பட்ட வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பைபெற்று வெற்றிபெற்ற வழக்கறிஞரான அஞ்சு தேவியே அயல் வீட்டுப் பெண்களால் மூர்க்கத்தனமாக தடிகளாலும் கைகளாலும் தாக்கப்பட்டுள்ளார்.
வழக்கறிஞரான அஞ்சு தேவி அண்மையில் அரச காணி ஆக்கிரமிப்புக்காக தனது அயல்வீட்டு பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். குறித்த வழக்கில் வழக்கறிஞர் அஞ்சு தேவிக்கு டில்லி உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பால் அயல் வீட்டுப்பெண்ணின் வீட்டுப் படிக்கட்டுகள் இடிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த அயல் வீட்டுப்பெண் தனது மகளுடன் இணைந்து வழக்கறிஞரான அஞ்சு தேவியை தாக்கியுள்ளனர்.
இதனால் குறித்த பெண் வழக்கறிஞர் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலில் ஈடுபட்ட அயல் வீட்டுப்பெண் அணிந்திருந்த சேலை கழற்று விழவிழ வழக்கறிஞர் மீது தாக்கும் காணொளி இணையத்தளமெங்கும் பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM