பாகிஸ்தானில் ஒரு பெண்ணுடன் தவறான உறவு வைத்துக்கொண்ட காரணத்தால் சிறுவனின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்ட சம்பவம் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாகூரில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுவனுக்கு, அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தவறான உறவு ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த அப்பெண்ணின் தந்தை, சில கூலியாட்களின் உதவியுடன் சிறுவனை பாடசாலை விட்டு வரும் வேளையில் கடத்திச் சென்று அவனை தாக்கி அவனது கண்களை தோண்டியெடுத்துவிட்டு வீதியில் போட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
குறித்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அவனுக்கு கண்பார்வையை திருப்பி கொண்டுவரமுடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்ற சிறுவனின் தந்தை, பாகிஸ்தான் உயர்நிதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக லாகூர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஹைதர் அஷரப் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM