பாலர் பாடசாலைக்குள் திடீரெனப் புகுந்த நபரொருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியையும், எட்டு வயது மாணவனும் பரிதாபமாகப் பலியாகினர். துப்பாக்கிதாரியும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்டவரின் பெயர் செட்ரிக் எண்டர்சன் என்றும், இவர், கொல்லப்பட்ட ஆசிரியையான இலெய்ன் ஸ்மித்தின் முன்னாள் கணவர் என்றும் கூறப்படுகிறது.
போதைப்பொருள் பயன்பாடு, குடும்ப வன்முறை போன்ற பல குற்றச்சாட்டுக்களையடுத்து செட்ரிக்கை விட்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன் இலெய்ன் ஸ்மித் பிரிந்தார்.
இந்நிலையில், இலெய்னிடம் சில பொருட்களைக் கையளிக்க வேண்டும் என்று கூறி, இலெய்ன் ஸ்மித் பணியாற்றிய பாலர் பாடசாலைக்குள் நுழைந்தார் செட்ரிக். இலெய்னின் வகுப்பறைக்குச் சென்ற அவர், ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தன்வசமிருந்த துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாகச் சுட்டார்.
இதில் இலெய்னும், அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த எட்டு வயதுச் சிறுவன் ஒருவனும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொரு சிறுவன் படுகாயமடைந்தான். சற்றும் தாமதிக்காமல் செட்ரிக் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்.
ஆபத்தான நிலையில் செட்ரிக்கும் மற்றொரு சிறுவனும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். எனினும் செட்ரிக்கின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்தச் சம்பவத்தினால் கடும் அதிர்ச்சிக்குள்ளான அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை முன் உடனடியாகத் திரண்டனர். எனினும் சுமார் இரண்டு மணி நேரங்களுக்குப் பின்னரே அவர்கள் தங்கள் பிள்ளைகளைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM