நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள எமக்கு பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்ய வேண்டும். ஜனாதிபதி நல்லெண்ண சமிக்ஞையாக இச்செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கோரியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது அங்கு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்துக்கொண்டார்.
இதன் போதே மேற்படி தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் ஆனந்தன் எம்.பி.யிடம் மேலும் தெரிவித்தாவது நாங்கள் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகள் சாட்சியங்களற்ற நிலையிலும் எம்மீது தொடுக்கப்பட்டு்ள்ளன.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது விடுதலை தொடர்பாக சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் உட்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இன்று வரையிலும் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி நல்லிணக்கம் சம்பந்தமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்துக்களை வெளியிடுகிறார்.
பிரபாகரன் ஏன் உருவானார் என்பதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் எனவும் அவர் தனது உரைகளில் சுட்டிக்காட்டுகிறார். இவ்வாறான கருத்துக்களை முன்வைக்கும் அவரிடத்தில் எமது விடுதலை சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடிய அளவு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.
குறிப்பாக கடந்த காலங்களில் அரசியலில் அசாதாரண நிலைகள் காணப்பட்ட நிலையிலே தான் நாம் கைது செய்யப்பட்டோம். ஆகவே எதிர்காலம் நோக்கி சிந்திக்கும் ஆட்சியாளர்களிடத்தில் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட எமக்கு ஓரு பொது மன்னிப்பின் அடிப்படையி்ல் விடுதலை வழங்க வேண்டும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியிடத்தில் வலியுறுத்தி தீர்வு பெற்றுதர வேண்டும்.
அதேநேரம் எமது வழக்குகளை கையாள்வதற்காக விசேட நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தின் ஊடாக கடந்த 2 வருடங்களில் இருவரின் வழக்குகள் மாத்திரமே நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு தமிழ் மொழி ரீதியான தமிழ் மொழியில் பரீட்சயம் இல்லாத நீதிபதிகள்இ சட்டத்தரணிகள், உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றமையே காரணமாகின்றது.
ஆகவே விசேட நீதிமன்றத்தின் ஊடாக எமக்கு எவ்விதமான நன்மைகளும் கிட்டவில்லை. அதேநேரம் நாம் எமது வழக்குகளை கையாள்வதற்காக தமிழ் சட்டத்தரணிகள் குழுவொன்றினை ஏற்பாடு செய்து தருமாறு ஏற்கனவே கூட்மைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இருப்பினும் தற்போது வரையில் அவ்வாறான குழுவொன்று தயார் செய்யப்படவில்லை. அது எமக்கு கவலையளிப்பதாக உள்ளது. எனவே அவ்வாறான குழுவொன்றை விரைந்து உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பை கோருவதாக அவர்கள் ஆனந்தன் எம்.பி.யிடம் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM