சொந்த நிலத்தில் தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி கேப்பாபுலவு மக்கள் இன்றுடன் (09) 40 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த வாரம் மீள்குடியேற்ற அமைச்சரால் கேப்பாபுலவு மக்களின் காணிகள் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் கேப்பாபுலவு பூரர்வீக கிராம மக்களின் போராட்டம் தொடர்கின்றது.
இவ்வாறும் பல போராட்டங்களை கடந்த காலங்களில் தாம் மேற்கொண்டிருந்த போதிலும் அந்த நேரங்களில் பலரால் இவ்வாறான வாக்குறுதிகள் பல வழங்கப்பட்டும், கடைசிவரை எந்த தீர்வும் தமக்கு வழங்கப்படாமல் தாம் ஏமாற்றபட்டதாகவும் இனியும் அவ்வாறானதொரு நிலையை தாம் விரும்பவில்லை எனவும், தற்போது அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதியானது விரைவில் நிறைவேற்றபட்டு தாம் சொந்த மண்ணில் கால்பதிக்க வேண்டும் எனவும் போராடிவரும் மக்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM