களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பெரியகல்லாற்றில் நேற்று இரவு வீடு புகுந்து திருடர்களால் தங்கநகைகள், பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
பெரியகல்லாறு மூன்றாம் குறிச்சியில் உள்ள திருமதி ராஜேந்தினி ஞானசேகரம் என்பவரின் வீட்டிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தங்கநகைகள், மூவாயிரம் ரூபா ரொக்கப்பணம், 11 முக்கால் பவுண் தாலிக்கொடி ஒன்றும், ஒரு பவுண் அளவில் இரண்டு காப்புக்களும், மூன்றரை பவுண் மாலை ஒன்றும் உள்ளிட்ட 17 1/4 பவுண் நகைகளையும் அபகரித்துச்சென்றுள்ளார்கள்
இச்சம்பவம் அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது சம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி என்.ரீ.அபூபக்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, மட்டக்களப்பு மாவட்ட தடையவியல் பொலிஸாரையும் வரவழைத்து விசாரணைகளையும், விஷேட ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் சந்தைப்பெறுமதி சுமார் பத்து இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM