இறக்காமத்தில் உணவு நஞ்சான சம்பவம் :  கைதுசெய்யப்பட்ட இருவர் விளக்கமறியலில்!

Published By: Ponmalar

09 Apr, 2017 | 10:43 AM
image

அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், 203 பேர் சுகவீனமுற்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இறக்காமம் வாங்காமத்திலுள்ள பள்ளியொன்றில் இம்மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற கந்தூரி நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள், அங்கு பரிமாறப்பட்ட உணவை உட்கொண்டதையடுத்தே திடீர் சுகவீனமடைந்தனர்.

இதன் பிறகு இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 203 பேர்  சுகயீனமுற்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார் குறித்த நிகழ்வில் சமயலில் ஈடுபட்ட இருவரை கைதுசெய்து, நேற்று (08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அம்பாறை நீதவான் இவர்களை 2 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

எனினும் குறித்த சந்தேக நபர்கள் குறித்த பிணையை முன்வைக்க முடியாததால், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15