இலங்கை கிரிக்கெட் அணியின் நியூஸிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணம் மிகவும் மோசமானதாக முடிந்துள்ளது. நியூஸியுடன் மோதிய அனைத்து தொடர்களையும் இழந்து, இருபதுக்கு 20 தரவரிசையில் இரண்டு இடங்கள் சறுக்கலையும் சந்தித்துள்ளது.
இலங்கை அணி நியூஸிலாந்தில் கடந்த ஒரு மாதமாக 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 2–0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-–1 எனவும் பறிகொடுத்தது.
இதைத் தொடர்ந்து நடந்த இருபதுக்கு 20 தொடரிலும் இலங்கை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் போட்டியில் 3 ஓட்டங்களால் தோற்ற இலங்கை, நேற்று நடைபெற்ற 2ஆவது இருபதுக்கு 20 போட்டியிலும் 9 விக்கெட்டுக்களால் தோற்றது.
நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர், இலங்கை அணியை முதலில் விளையாட அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய இலங்கை 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களையே பெற்றது. அஞ்சலோ மெத்தியூஸ் ஒருவரே அதிரடியாக விளையாடி 81 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸியின் எல்லியாட் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
143 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய நியூஸி. 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குப்தில் 19 பந்துகளில் அரை சதத்தை கடந்து சாதனை படைத்தார். அவரது சாதனையை முன்ரோ 14 பந்துகளில் 50 ஓட்டங்களைத் தொட்டு முறியடித்தார்.
குப்தில் 63 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். முன்ரோ 14 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றார். வில்லியம்ஸன் 31 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 2–0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்தத் தோல்வியினால் இலங்கை அணி இருபதுக்கு 20 தரவரிசையில் தனது முதல் இடத்தை பறிகொடுத்துள்ளது. 118 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்த இலங்கை அணி தற்போது 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது முதல் இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும், 2ஆவது இடத்தில் அவுஸ்திரேலியாவும் தலா 118 புள்ளிகளுடன் உள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM