ஸ்வீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில், சன நெரிசலான பகுதியில் படு வேகமாகப் புகுந்த வாகனம் மோதி நான்கு பேர் பலியாகினர். மேலும் பதினைந்து பேர் படு காயங்களுக்குள்ளாகினர். இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தீவிரவாதச் செயலாக இருக்கலாம் என்று உறுதியாக நம்பப்படுகிறது.
வார இறுதி நாளான நேற்று (7) வெள்ளியன்று, சன நெரிசலான சந்தைப் பகுதிக்குள் வேகமாக நுழைந்தது ஒரு பெரிய ட்ரக். வீதியின் இரு மருங்கிலும் வளைந்து வளைந்து ஓடிய அந்த ட்ரக், எதிர்ப்பட்டவர்களையெல்லாம் மோதியபடி சென்று ஒரு சிறப்பு அங்காடிக் கட்டிடத்தில் மோதி நின்றது. இதில், தள்ளுவண்டியில் வைத்து அழைத்து வரப்பட்ட குழந்தை ஒன்றும் அடக்கம்.
குறித்த ட்ரக் வண்டி பியர் உற்பத்தி நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது. மர்ம நபர்கள் சிலர், பியர்களை வினியோகிக்க வந்த அந்த ட்ரக்கை கடத்தியே இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாகத் தெரியவருகிறது. ட்ரக்கைக் கடத்தியவரைத் தடுக்க முயன்ற ட்ரக் சாரதியும் கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் உள்ளவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதோடு, சுற்று வட்டாரங்களில் தேடுதல் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM