அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை கிரேன்லி கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள நீர் தாங்கியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சிறுத்தைக் குட்டி இன்று காலை நீர் தாங்கியில் இருப்பதைக் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டுள்ளனர். இதனையடுத்து, சிறுவர்கள் பொது மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் உடனடியாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், அக்கரப்பத்தனை பொலிஸாருக்கும் இது குறித்த தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த சிறுத்தை குட்டியை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்கவுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைகாலமாக மக்கள் நடமாடும் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடி வருவதாக தெரிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் சிறுத்தைக் குட்டி மீட்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM