ஒற்றையாட்சியில் மாற்றமில்லை 

11 Jan, 2016 | 08:36 AM
image

புதிய அர­சி­ய­ல­மைப்­பினால் இலங்­கையில் பௌத்த தர்­மத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள முத­லி­டமோ ஒற்­றை­யாட்­சிக்கோ எது­வி­த­மான பாதிப்பும் ஏற்­ப­டாது. இலங்கை வர­லாற்­றில சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்ள முத­லா­வது புதிய அர­சி­ய­ல­மைப்­பாக இது அமையும் என்று அர­சாங்கம் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளது.

பிட்­ட­கோட்­டே­யி­லுள்ள ஐ.தே.கட்சி தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர்

மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சபை முதல்­வரும் நெடுஞ்­சா­லைகள் மற்றும் உயர் கல்வி அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

அர­சாங்கம் தற்­போது புதிய அர­சி­ய­ல ­மைப்­புக்­கான தீர்­மா­னத்­தையே முன்­வைத் ­துள்­ளது. இது தொடர்பில் சிறி லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சிலர் மற் றும் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. ஆகியோர் திருத்­தங்­களை முன்­வைத்­துள்­ளனர். ஏனைய கட்­சி­களும் தமது திருத்­தங்­களை

முன்­வைக்க முடியும்.

1972 ஆம் ஆண்டு குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பும் வெ ளிப்­படைத் தன்­மை­யாக விவா­திக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்­பாக யோச­னைகள் கொழும்பு றோயல் கல்­லூரி நவ­ரங்­க­ஹல மண்­ட­பத்­தி­லேயே விவா­திக்­கப்­பட்­டன. இக்­கூட்­டத்தில் கலந்து கொள்­வ­தற்­கான கடி­தங்­களை அன்று மஹிந்த ராஜ­ப­க்ஷவே அனுப்பி வைத்தார். மக்கள் கருத்­துக்கள் பெறப்­ப­ட­வில்லை.

அதே­போன்று 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பும் தெரி­வுக்­குழு மட்­டத்­தி­லேயே விவா­திக்­கப்­பட்­டது. பாரா­ளு­மன்­றத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­டவும் இல்லை. விவா­திக்­கப்­ப­டவும் இல்லை. மக்­களின் கருத்­துக்கள் பெற்றுக் கொள்­ளப்­ப­டவும் இல்லை.

இந்­நி­லையில் ஒரு சிலர் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள தீர்­மானம் சட்­ட­வி­ரோ­த­மென்­கி­றார்கள். இது சட்­ட­வி­ரோ­த­மா­ன­தல்ல. 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பின் 82ஆவது ஷரத்­திற்­க­மை­யவே அர­சினால் பாரா­ளு­மன்­றத்தில் தீர்­மானம் முன் வைக்­கப்­பட்­டுள்­ளது.

1978 அர­சி­ய­ல­மைப்பின் அடிப்­ப­டை­யி­லேயே அனைத்தும் முன்­னெ­டுக்­கப்­படும். தற்­போது நாம் பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்றி அனை­வ­ரது கருத்­துக்­க­ளையும் திருத்­தங்­க­ளையும் பெற்­றுக்­கொள்­ள­வுள்ளோம்.

கடந்த காலங்­களைப் போல் அறைக்குள் பேசும்­போது ஒரு கருத்தைக் கூறி விட்டு வெளியில் வந்து வேறொரு கருத்தைக் கூற முடி­யாது. அனைத்தும் வெளிப்­படைத் தன்­மை­யா­கவே அமையும். எமக்கு மறைப்­ப­தற்கு எதுவும் கிடை­யாது.

பாரா­ளு­மன்­றத்தில் உள்ள அனைத்து கட்­சி­களும் தமது கருத்­துக்­களை வெளிப்­ப­டை­யாக வெளி­யிட முடியும். அதே­வேளை புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பில உயர் நீதி­மன்றம் தனது வியாக்­கி­யா­னத்தைக் கூற வேண்டும். அதனை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அப்­போது தான் அதற்­கான மக்கள் பங்­க­ளிப்பு முழு­மை­யாக இருக்கும். உதா­ர­ண­மாக இந்­தி­யாவின் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் பிர­தம நீதி­ய­ர­சரை நிய­மிக்கும் போது ஜனா­தி­பதி பிர­த­மரின் ஆலோ­ச­னை­களை பெற வேண்டும்.

இது தொடர்பில் அண்­மையில் பிர­த­மரின் ஆலோ­ச­னையை மட்­டு­மல்ல விருப்­பத்­தையும் பெற வேண்­டு­மென இந்­திய உயர் நீதி­மன்றம் இவ்­வி­ட­யத்தில் தலை­யிட்டு தீர்ப்­ப­ளித்­துள்­ளது. இது போன்­ற­தொரு நிலைமை இங்கும் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

கடந்த கால ஆட்­சியில் 18ஆவது திருத்தம் தன்­னிச்­சை­யாக நிறை­வேற்­றப்­பட்­டது. இதற்கு உயர் நீதி­மன்­றத்தின் வியாக்­கி­யானம் பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை.

இதனால் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் அனைத்தும் நிறை­வேற்று அதி­கா­ரத்தின் கீழ் வந்­தன. எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் மக்கள் கருத்­துக்கள் கேட்­கப்­படும். அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் பெற்றுக் கொள்­ளப்­படும். அது­மட்­டு­மன்றி இறு­தியில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு மக்­களின் விருப்பு பெற்­றுக்­கொள்­ளப்­படும்.

மக்­களின் தீர்­மா­னமே இறுதித் தீர்­மா­ன­மாக அமையும். எனவே இலங்கை வர­லாற்றில் அர­சி­ய­ல­மைப்­புக்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும் அர­சி­ய­ல­மைப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பு அமையும்.

தேசிய பிரச்­சினை உட்­பட நாட்டின் பல பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண்­ப­தற்­கான இறுதி சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சித் தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­க­வுள்ளார்.

ஐக்­கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக உள்ளார். இவ்­வாறு நாட்டின் இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து ஆட்சி அமைக்கும் சந்­தர்ப்பம் தற்­போது கிடைத்­துள்­ளது. இது போன்­ற­தொரு சந்­தர்ப்பம் இனிமேல் ஒரு­போதும் கிடைக்கப் போவ­தில்லை.

எனவே இச்­சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்திக் கொண்டு அனைத்து கட்­சி­க­ளி­னதும் கருத்­துக்­களை பெற்­றுக்­கொண்டு நாட்­டுக்கு உகந்த அர­சி­ய­ல­மைப்பை ஏற்­ப­டுத்­துவோம்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான தீர்­மா­னமே தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அனை­வரும் தமது கருத்­துக்­க­ளையும் திருத்தங்களையும் முன்வைக்க முடியும். விவாதிக்க முடியும். அனைத்தும் வெளிப்படைத்தன்மையாகவே அமையும். எதுவுமே இரகசியமாக மேற்கொள்ளப்படமாட்டாது.

அத்தோடு புதிய அரசியலமைப்பினால் பௌத்த தர்மத்திற்கு எதுவிதமான பாதிப்பும் ஏற்படாது. அதேபோன்று இலங்கையின் ஒற்றையாட்சிக்கும் பாதிப்பு ஏற்படாது.

எனவே வடக்கு மற்றும் தெற்கிலுள்ள அடிப்படை வாதிகளின் பொய்ப் பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. நாட்டின் எதிர்கால சந்ததியினரின் வளமான வாழ்க்கை மற்றும் நாட்டை கட்டியெழுப்பும் நோக்கிலேயே நாம் அனைத்தையும் மேற்கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33