உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அவுஸ்திரேலிய அமைச்சர் கொன்சீட்டா ப்யரவான்ரி, வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது.
அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் கொன்சீட்டா ப்யரவான்ரியின் முதல் இலங்கை விஜயம் இதுவாகும்.
கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் வடக்கின் நிலைமைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின், வட பகுதியில் எவ்வாறான அபிவிருத்திகள் மற்றும் முன்னேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பன பற்றியும், மக்களின் வாழ்க்கைக்கான பொறுப்புக் கூறல் போன்ற அம்சங்களை அரசு எவ்வாறு பேணி வருகிறது என்பது பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கு அவுஸ்ரேலியா வழங்கிவரும் உதவிகள் குறித்து நன்றி தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், தொடர்ந்தும் இதுபோன்ற உதவிகளை தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில், வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹட்செசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM