முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார். அவருக்கு எதிராகவும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகளே இந்த தடைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுமார் ஒருமாதகால பயணத்தை மேற்கொண்டு நாளை சீனாவுக்கு பயணமாவார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பயணம் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவர் மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவரது இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த பயணத்தின் பின்னர் சீனா பயணிப்பார் என தெரிவித்திருந்த நிலையில் அது தொடர்பில் வினவியபோது தனது உடல்நிலை சுகவீனம் காரணமாக தனது இந்த பயணத்தை பிற்போட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM