சைட்டம் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு: விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி!

Published By: Ponmalar

04 Apr, 2017 | 08:44 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரியான டொக்டர். சமீர சேனாரத்னவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் புதிதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனயவுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சுதத் நாகமுல்லா ஆகியோரின் மேற்பார்வையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் ஆலோசனைக்கு அமைவாக கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சுனில் சரணபாலவின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனயவுப் பிரிவு ஊடாக விஷேட விசாரணைகளை செய்ய பொலிஸ்மா அதிபருக்கு கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படியே தற்போது புதிதாக குற்றப் புலனயவுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள நிலையில், அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு நேற்று கடுவலை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதனை விட இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் விசாரணை செய்த முல்லேரிய பொலிஸாரிடமும், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடமும் குற்றப் புலனயவுப் பிரிவு வாக்கு மூலம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51