சிரியாவில் நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரசாயனத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 58 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரசாயன வாயுவை சுவாசித்த பலரும் மூச்சடைத்தும், சுய நினைவிழந்தும் விழுந்து மரணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பலரது வாயிலும் நுரை தள்ளியிருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில், செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்ட பல குழந்தைகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
சிரியாவின் இட்லிப் பிராந்தியத்தில் விமானம் மூலமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், இத்தாக்குதலால் மேலும் 60 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது. எனினும், இத்தாக்குதலை சிரிய இராணுவம் மேற்கொண்டதா, ரஷ்ய இராணுவம் மேற்கொண்டதா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை எனவும் அறிவித்துள்ளது.
இதேவேளை, டமஸ்கஸ் வட்டாரங்கள் இச்செய்தியை கடுமையாக மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM