உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் அமைச்சர் கொன்ஷிடா பிர்வென்டி வெல்ஸ் இன்று செவ்வாய்க்கிழமை இல்ஙகை வந்தடைந்தார்.
இலங்கையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினருடன் சந்திப்புக்களில் கலந்துகொள்வார்.
அவுஸ்திரேலிய சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் அமைச்சரின் இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் என்பதால் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு முக்கியமாக அமையுமென இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பொருளாதார மற்றும் அபிவிருத்தி பங்காளியாக இலங்கை இருந்து வருகின்றது. இந்த வருடம் இரு நாட்டு இராஜதந்திர உறவின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடவுள்ளதாகவும் இறுதிக்கட்டப் பேரின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானத்திற்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அவுஸ்திரேலியா வழங்கியிருந்தது. இதன் முன்னேற்றங்களை காண்பதற்கு வடக்கிற்கும் அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் அமைச்சர் கொன்ஷிடா பிர்வென்டி வெல்ஸ் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM