மாலபே தனியார் வைத்திய கல்லூரியினை அரசுடைமையாக்குமாறு அரசினை வலியுறுத்தும் முகமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடு தழுவிய 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
எனினும் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவைகள் இடம்பெறும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இது இலங்கை வைத்திய சேவையிற்கு தரமற்ற வைத்தியர்களை அரசியல் செல்வாக்குக்காகவும், பணத்துக்காகவும் உருவாக்கி நோயாளர்களின் உயிரை பணயம் வைக்கும் அரசியல் வியாபாரிகளுக்கு எதிரான போராட்டம் ஆகையினால் எம்முடன் இம்முறை நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கைகோர்த்துள்ளன.
இதே தினம் கொழும்பில் மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் இப் போராட்டத்தினை வலியுறுத்தி 11 மணி தொடக்கம் 3 மணிவரையில் நடைபெறும் என்றும் அவசர நோய் அல்லது விபத்துகளின் போது உடனடியாக தயங்காமல் வைத்தியசாலையை நாடுங்கள் அங்கு எமது வைத்தியர்கள் உங்கள் உயிர்காக்க எப்போதும் போலவே தயார் நிலையில் இருப்பார்கள் எனவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM