பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுவதற்கான ஒப்பந்தப் பட்டியலிலுள்ள 16 வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி மறுத்துள்ளது.
பங்களாதேஷில் பிரீமியர் போட்டிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் விளையாட இலங்கை வீரர்கள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஒப்பந்தப் பட்டியலிலுள்ள வீரர்கள் பலர் அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதே போல் நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியில் இடம்பெறாத ஒப்பந்த வீரர்கள் இலங்கையில் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் உள்ளூர் போட்டிகளிலேயே விளையாட வேண்டுமென இலங்கை கிரிக்கெட் சபை எச்சரித்துள்ளது.
குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் வீரர்களின் தரத்தை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM