தெற்கு இளைஞர்களுக்கு இருக்கும் பிரச்சினையே வடக்கு இளைஞர்களுக்கும் இருக்கின்றது. அதனால்தான் வடக்கு இளைஞர்கள் ஆயுதமேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதை தெற்கில் இருப்பவர்கள் தற்போது உணர்ந்துள்ளனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமநாதன் அங்கஜன் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய இளைஞர் சம்மேளனம் நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெறவுள்ளது.
நடைபெறவுள்ள சம்மேளனம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றலுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய இளைஞர் சம்மேளனம் சுகததாச அரங்கில் நாளை இடம்பெறவுள்ளது.
இந்த சம்மேளனத்தில் வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பிரதேசங்களில் இருந்தும் எமது இளைஞர், யுவதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் அதில் கலந்துகொள்ள எதிர்பார்க்கப்பட்ட போதும் இடப்பற்றாக்குறை காரணமாக 500பேர் வரைக்குமே கலந்துகொள்ள எமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இளைஞர், யுவதிகள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துவருவதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய இளைஞர் சம்மேளனத்தில் வடக்கு, கிழக்கில் இளைஞர், யுவதிகள் கலந்துகொள்வதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். அதேபோன்று நாட்டில் இடம்பெற்று வந்த மதவாதம் பிரிவினை வாதங்களை அடக்குவதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சகல இன மக்களையும் ஒன்றிணைத்துள்ளார்.
மேலும் தெற்கு இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையும் வடக்கு இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. அதாவது ஒட்டு மொத்த இளைஞர்களும் இன்று எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினையாக இருப்பது தொழில் இல்லாமையாகும். அதனால் தான் வடக்கு இளைஞர்கள் அன்று ஆயும் ஏந்துவதற்கு காரணமாக இருந்தனர் என்பதையும் தெற்கு இளைஞர்கள் இன்று உணர்ந்துள்ளனர்.
எனவே நாளை நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய இளைஞர் சம்மேளனத்தின்போது இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. அத்துடன் 13வருடங்களுக்கு பிறகு நடைபெறும் இந்த சம்மேளனம் ஒட்டுமொத்த இளைஞர் யுவதிகளுக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக அமையும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM