வடக்கை தெற்கு உணர்ந்துள்ளது : யாழ். மாவட்ட சு.க. அமைப்பாளர் அங்கஜன்

Published By: Priyatharshan

01 Apr, 2017 | 10:11 AM
image

தெற்கு இளைஞர்­க­ளுக்கு இருக்கும் பிரச்­சி­னையே வடக்கு இளைஞர்­க­ளுக்கும் இருக்­கின்­றது. அத­னால்தான் வடக்கு இளைஞர்கள் ஆயு­த­மேந்தும் நிலைக்கு தள்­ளப்­பட்­டனர் என்­பதை தெற்கில் இருப்­ப­வர்கள் தற்­போது உணர்ந்­துள்­ளனர் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் யாழ். மாவட்ட அமைப்­பா­ள­ரு­மான இராம­நாதன் அங்­கஜன் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய இளைஞர் சம்­மே­ளனம் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு சுக­த­தாச அரங்கில் இடம்­பெ­ற­வுள்­ளது.

நடை­பெ­ற­வுள்ள சம்­மே­ளனம் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்­துத் ­தெ­ரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பங்குபற்­ற­லுடன் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய இளைஞர் சம்­மே­ளனம் சுக­த­தாச அரங்கில் நாளை இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்த சம்­மே­ளனத்தில் வடக்கு, கிழக்கு, மலை­ய­க­ம் ­போன்ற பிர­தே­சங்­களில் இருந்தும் எமது இளைஞர், யுவ­திகள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட இளைஞர்கள் அதில் கலந்­து­கொள்ள எதிர்­பார்க்­கப்­பட்­ட ­போதும் இட­ப்­பற்­றாக்­குறை கார­ண­மாக 500பேர் வரைக்­குமே கலந்­து­கொள்ள எமக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் இளைஞர், யுவ­திகள் எதிர்­நோக்­கி­வரும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வ­தனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய இளைஞர் சம்­மே­ள­னத்தில்  வடக்கு, கிழக்கில் இளைஞர், யுவ­திகள் கலந்­து­கொள்­வ­தற்கு ஆர்­வ­மாக இருக்­கின்­றனர்.  அதே­போன்று நாட்டில் இடம்­பெற்று வந்த மதவாதம் பிரி­வினை வாதங்­களை அடக்­கு­வ­தற்கும் ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுத்துள்­ள­துடன் சகல இன மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்­துள்ளார். 

மேலும் தெற்கு இளைஞர்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னையும் வடக்கு இளைஞர்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னையும் ஒரே மாதி­ரி­யா­கவே இருக்­கின்­றது. அதா­வது ஒட்டு மொத்த இளைஞர்­களும் இன்று எதிர்­கொள்ளும் பிர­தான பிரச்­சி­னை­யாக இருப்­பது தொழில் இல்­லா­மை­யாகும். அதனால் தான் வடக்கு இளைஞர்கள் அன்று ஆயும் ஏந்­து­வ­தற்கு கார­ண­மாக இருந்­தனர் என்­ப­தையும் தெற்கு இளைஞர்கள் இன்று உணர்ந்­துள்­ளனர்.

எனவே நாளை நடை­பெ­ற­வுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தேசிய இளைஞர் சம்­மே­ள­னத்­தின்­போது இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. அத்துடன்  13வருடங்களுக்கு பிறகு நடைபெறும் இந்த சம்மேளனம் ஒட்டுமொத்த இளைஞர் யுவதிகளுக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக அமையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51