இந்த விமர்சனங்களால் வீரர்களுக்கு அழுத்தம் அதிகரிக்கின்றது. அதற்காக அவர்களை விமர்சிப்பது தவறு என்றும் சொல்ல முடியாது. அழுத்தங்களை தாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வதே ஒரு கிரிக்கெட் வீரரின் தகுதி என இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளரும், முன்னாள் வீரரருமான அசங்க குருசிங்க தெரிவித்தார்.
இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதும் மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இன்று காலை ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டியில் இலங்கை அணி கட்டாயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும். அப்படி வெற்றிபெற்றாலும் தொடரை வெல்ல முடியாது என்றாலும் கூட தொடரை இழக்காமல் சமநிலையில் முடிக்க முடியும்.
இந்நிலையில் இந்தப் போட்டி குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளரும், முன்னாள் வீரரருமான அசங்க குருசிங்க,
இலங்கை மிகவும் பலமாகத்தான் உள்ளது. அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அந்தத் தருணங்களில் சில தவறுகளை விடும்போது முடிவுகள் மாறிவிடுகின்றன.
அந்தத் தவறுகளை சரிசெய்து கொண்டு இரண்டாவது போட்டியில் களமிறங்கியிருந்தோம். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக மழை பெய்ததால் வெற்றி நழுவிவிட்டது.
அதனால் மூன்றாவது போட்டியில் எமக்கு வெற்றி நிச்சயம். அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இரண்டாவது போட்டியில் விளையாடிய அதே அணிதான் களமிறங்கும் என்றார்.
அதேவேளை விமர்சனங்கள் எழுவது குறித்து கேட்டபோது, ஒரு கிரிக்கெட் வீரர் விமர்சனங்களுக்கு அஞ்சக்கூடாது. அணி சரிவை சந்திக்கும்போது ரசிகர்களுக்கு கோபம் வரும். அது நியாயமான ஒன்று.
நாம் விளையாடியபோதும் விமர்சனங்கள் செய்யப்பட்டன. ஆனால் அவை பத்திரிகைகளாலும் வானொலிகளாலும் மட்டுமே செய்யப்பட்டன. ஆனால் தற்போது அப்படியல்ல. சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைத்தளங்களில் அணி வீரர்களையும் அணியையும் விமர்சிக்கிறார்கள்.
இந்த விமர்சனங்களால் வீரர்களுக்கு அழுத்தம் அதிகரிக்கின்றது. அதற்காக அவர்களை விமர்சிப்பது தவறு என்றும் சொல்ல முடியாது. அழுத்தங்களை தாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வதே ஒரு கிரிக்கெட் வீரரின் தகுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM