கண்டி - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதோடு மலையகத் தின் பிரதான நகரமான கண்டி நகரமும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற் றும் உயர்கல்வி அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
புஸல்லாவ வாடி வீட்டு கேட் போர் கூட மண்டபத்தில் புஸல்லாவ நகர வர்த்தகர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது, கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்ட பகுதிகளுக்கு சுமார் 750 மில்லியன் ரூபா செலவில் கார்பட் வீதிகள் அமைக் கும் வேலைத்திட்டம் அடு த்த மாதம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையோடு ஆரம்பிக்கப்
படவுள்ளது. இதில் இங்குறுவத்த, வெவதன்ன, பெரலுமன் கட, மில்லகாமுல, கலுகல்லதோட்ட, போமண்ட் தோட்டம், மெல்போட் தோட்டம் வழியாக புஸல்லாவ நகரத்தை இணைக்கும் வகையில் பங்குலிதென்ன புஸ்ஸதென்ன வரைக்கும் சுமார் 25 கிலோ மீற்றர் வரைக்கும் கார்பட் வீதியாக சீர் செய்யப்படவுள்ளது.
மேலும், கண்டி நகரில் போக்குவரத்து வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பல போக்குவரத்து வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் புதிய மேம்பாலங்களை அமைப்பதற்கும் சுமார் 1228 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM