தன்னை ஒரு மந்திரவாதியாகக் காட்டிக்கொண்ட இலங்கையர் ஒருவரை குவைத் பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த நபர், குவைத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வருபவர். மந்திரவாதி என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இவர், குவைத்தின் முக்கிய பிரமுகர்கள்கூட தனது வாடிக்கையாளர்கள்தான் என்று பிரகடனப்படுத்தி வந்தார்.
இதை நம்பிய பலரும் இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகப் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, சிவில் உடையில் சென்ற பொலிஸார், அவரிடம் சாமர்த்தியமாகப் பேச்சுக்கொடுத்து அவரிடமிருந்து பல தகவல்களைப் பெற்றுக்கொண்டனர். அதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தான் குடும்பங்களைப் பிரிப்பதிலும், காதலர்களைச் சேர்த்து வைப்பதிலும் கைதேர்ந்தவர் என்று பொய்ப் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். இதை நம்பிப் பலரும் இவரிடம் ஏமாந்துள்ளனர். ஒவ்வொரு வேலைக்கும் சுமார் 250 குவைத் தினார்களைக் கட்டணமாக இவர் அறவிட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM