பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் எதிர்பாராத விதமாக போட்டியின் போது விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணியின் அஹமட் சேஷாட் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் செமியல்ஸ் ஆகியோர் மோதிக் கொண்டதில் சேஷாட்டின் கழுத்துப்பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது.
இதனால் மைதானத்துக்குள் அம்பியுலன்ஸ் கொண்டுவரப்பட்டு, சேஷாட் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடும் போது, 4 ஓவரின் இறுதி பந்தை எதிர்கொண்ட செமியல்ஸ் ஒரு ஓட்டத்தை எடுக்க முற்பட்டார், இதன் போது பந்தை தடுத்த சேஷாட் ஆட்டமிழப்பை எடுக்க முற்பட்ட போதே இருவரும் மோதிக்கொண்டு விழுந்துள்ளனர்.
இதில் ஹேஷாட் கடுமையான வலியை உணர்ந்து, மைதானத்தில் சுருங்கி விழுந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சேஷாட் தற்போது சற்று குணமடைந்துள்ளதாகவும், பெரிதான காயம் இல்லையெனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM