(ஆர்.யசி)
யாழ்ப்பாணம் மற்றும் பதுளை மாவட்டங்களின் பாராளுமன்ற ஆசன எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி பதுளை மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 9லிருந்து 8 ஆக குறைவடைந்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 6லிருந்து 7 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் இந்த ஆசன எண்ணிக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அடுத்து நடைபெறவுள்ள பாரளுமன்ற தேர்தலின்போது பதுளை மாவட்டத்துக்கான பாரளுமன்ற ஆசனங்களில் ஒன்று குறைக்கப்படும். அந்த வகையில் இப்போது உள்ள 9 ஆசனங்களில் ஒன்று குறைக்கப்பட்டு அடுத்த தேர்தலின் போது பதுளை மாவட்டத்தின் பாரளுமன்ற ஆசன எண்ணிக்கை எட்டாக மாற்றப்படவுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான பாராளுமன்ற ஆசனங்களில் ஒன்று கூடியுள்ளது. அந்த வகையில் இதுவரை யாழ்ப்பாணம் மாவத்தின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ஆசன எண்ணிக்கை தற்போது ஏழாக அதிகரித்துள்ளது. இதேவேளை, அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் தொடர்பிலான விவரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல், நேற்று முன்தினம் 29ஆம் திகதி வெளியானது. எனினும் குறித்த இரண்டு மாவட்டங்களின் பாரளுமன்ற ஆசன எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் வேறு எந்த மாவட்டங்களிலும் எதுவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM